தீப்பற்றலுக்குள்ளான எம்.வீ எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு நிறுவனத்தின் தலைவரான அர்ஜூன ஹெட்டியாரச்சி இன்று (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
அவரது சட்டத்தரணி அனுர மத்தேகொட இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (15) கொழும்பு மேலதிக நீதவான் லோச்சன அபேவிக்ரம முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது நீதிமன்றில் முன்னிலையான அரசாங்கத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் மாதவ தென்னகோன், கப்பலின் உள்ளூர் தலைவர், வாக்குமூலம் வழங்குவதை திட்டமிட்டே தவிரத்து வருவதனால் அவர் வெளிநாடு செல்வதை தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரியிருந்தார்.
எவ்வாறாயினும், தமது கட்சிக்காரர் இன்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக, அவர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட தெரிவித்துள்ளார்.

