கல்விசாரா பணியாளர்களின் போராட்டம்

469 0

proterstபல்கலைக்கழகங்களின் கல்விசாரா பணியாளர்கள் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர்.
சுமார் 7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தொழிற்சங்க தலைவர் எட்வேட் மல்வட்டகே தெரிவித்துள்ளார்
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காமை காரணமாகவே தாம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.