அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு ஐக்கிய இராச்சியத்திலும் இன்று (12/06/2021) சிறப்பாக நடைபெற்றது.

473 0

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு ஐக்கிய இராச்சியத்திலும் இன்று (12/06/2021) சிறப்பாக நடைபெற்றது. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக்கிளையான தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. காலச்சூழலின் பொதுப்பாடின்மை கரணியமாக இணையவழியூடாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்கு செய்யப்பட்டு, காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் 525 மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியிருந்தார்கள். அதேவேளை ஐக்கிய இராச்சியம், ஐரோப்பா உட்பட பல நாடுகளிலும் இத்தேர்வானது சம நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.