யானை தாக்குதலில் நபர் ஒருவர் பலி

266 0

திருகோணமலை – எத்தாபெந்திவெவ பகுதியில் ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. தஸநாயக்க (63 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கதுருவெவ எனும் இடத்திலுள்ள வயலுக்கு துப்பரவு செய்வதற்கு சென்ற போது யானை தாக்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளதாகவும் மாலையாகிய போது வீட்டுக்கு வராததை அடுத்து வயலுக்குச் சென்று பார்த்தபோது யானையின் தாக்குதலினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.