நானும் எனது மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டோம்! -சஜித்

220 0

முழு இலங்கை மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் வரை தாமும், தமது மனைவியும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து  தடுப்பூசியை செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேசிய சஜித்,

தடுப்பூசி போட மறுத்ததால் தான் தாம் இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இலங்கையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடும் வரை தமது முன்னைய நிலைப்பாட்டை தொடர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அபாயங்களைத் தவிர்க்க சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்ற உள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய தொற்றுநோயால் மக்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எனவே, இந்த கடினமான சூழ்நிலையை சமாளிக்க ஒட்டுமொத்த தேசமும் ஒன்று சேர வேண்டிய நேரம் இது  என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.