இந்திய டெல்டா திரிபுடன் இலங்கையில் மற்றுமொருவர் அடையாளம்!

368 0

இந்தியாவில் பரவும் B.1.617 (டெல்டா) கொரோனா வைரஸ் திரிபுடன், இலங்கை தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இலங்கையர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.