பிரதமர் தலைமையில் இன்றும் முக்கிய கூட்டம்

368 0

ranil-350-newsபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்றையதினம் மற்றுமொரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநித்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்கள், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது அரசாங்கத்தின் நிதி நிலவரங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார செயற்பாடுகள் தொடர்பிலும் பிரதமரினால் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டதாகவும் இதில் கலந்து கொண்டிருந்த சிரேஷ்ட்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.