திருகோணமலையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

226 0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) திருகோணமலையிலும் முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பூம்புகார் அல்மின்ஹாஜ் முஸ்லீம் பாடசாலை, அபயபுர மகளீர் கல்லூரி மற்றும் தான்யகம அரச வைத்திய நிலையம் ஆகியவற்றில் முதற்கட்ட தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் கர்ப்பணி தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு  முன்னுரிமை வழங்கப்பட்டு, தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும்  தடுப்பு மருந்துகள் வழங்கும் நடவடிக்கை இன்று  முன்னெடுக்கப்பட்டது.