கல்முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

222 0

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “அம்பாறை- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட ஆலையடிவேம்பைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று அம்பாறை வைத்தியசாலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கல்முனைக்குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் மருதமுனையைச் சேர்ந்த  ஆண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.