ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனை சாவடி மீது தாக்குதல் – 8 வீரர்கள் பலி

296 0

20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தலீபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.

ராணுவம் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும் வான் வழியாகவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் அதே வேளையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் பாக்லான் மாகாணத்தில் உள்ள ஜுக்லா மாவட்டத்தை கைப்பற்றும் நோக்கில் தலீபான்கள் தொடர்ந்து அங்கு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜுக்லா மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனை சாவடியின் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையில் நேற்று அதிகாலை வரையில் விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 2 மூத்த அதிகாரிகள் உள்பட 8 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்தனர்.