சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துங்கள்

264 0

வேகமாக பரவும் கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.

14 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் நேற்று (01) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் ஆபிரிக்காவில் மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவில் இருந்து இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலமையில் இந்த செயற்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.