நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,047 பேர் கைது

313 0
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19,102 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.