காரைதீவில் சட்டவிரோதமான முறையில் வைத்திருத்த மதுபான போத்தல்கள் பறிமுதல்!

251 0

சம்மாந்துறை- காரைதீவிலுள்ள வீடொன்றில், சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த மதுபான போத்தல்கள், பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியிலுள்ள குறித்த வீட்டில் சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்த பொலிஸார், 80 மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .