30 நாள் பரோலில் பேரறிவாளன் விடுவிப்பு

241 0

பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 30 நாள் பரோலில் போலீசார் விடுவித்தனர்.
இதையடுத்து புழல் சிறையில் இருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார்.