சாவகச்சேரியில் வீதியில் நின்ற தொற்றாளர்

349 0
தொற்று அடையாளங் காணப்பட்ட நபர் வீதியோரத்தில் உள்ள வீட்டு வாசலில் நின்றதால் அந்த வீதியில் பயணிக்க அச்சம் கொண்ட பொதுமக்கள் வேறு விதிகளைப் பயன்படுத்தினர்.
சாவகச்சேரி நகர பகுதியில் உள்ள ஒருவரே தொற்றுடன் வீதியில் காணப்பட்டுள்ளார். இவர் வீதியில் காண்பவர்களுடன் கதைக்கின்றார் எனவும், இதனால் அந்த வீதியில் சென்ற பொதுமக்கள் வேறு வீதிகளை பயன்படுத்தி செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
  தொற்றுக்குள்ளான நபரை சிகிச்சைக்கா அழைத்துச் செல்லாத நிலையில் அவர் தொடர்ந்தும் வீட்டிலேயே  இருப்பதுடன் அழைத்துச் செல்லும் வாகனத்தை எதிர்பார்த்து வீட்டிற்று வெளியேயும்  வந்து செல்வதாகவும் மேலும் தெரியவருகிறது.