வவுனியாவில் 30 கைக்குண்டுகள் மீட்பு

282 0

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்நு 30 கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளனர்.

நேற்று (17) மாலை வவுனியா பூவரசங்குளம் செங்கல்படை பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். பண்படுத்தப்பட்ட போது குறித்த காணியில் முட்டி ஒன்றினுள் கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்துள்ளார்

பின்னர் குறித்த விடயம் பூவரசங்குளம் பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் முட்டி ஒன்றிற்குள் இருந்து30 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு வெடிபொருட்கள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை இன்று சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பின் முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.