மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார் உட்பட 66 பேருக்கு கொரோனா!!

265 0

மட்டக்களப்பில் இரு கர்ப்பிணித் தாய்மார், சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 66 பேருக்கு இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1502 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா தொற்று றோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும் அவர் கூறினார்.

இதவேளை சின்ன ஊறணி, திருச்செந்தூர், கல்லடி வேலூர் கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.