போகம்பறை சிறை கைதிகள் கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

350 0

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர், கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமக்கு விரைவாக பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் உடனடியாக பிணை வழங்க வேண்டும் என கோரியே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இவர்கள் தொடங்கியுள்ளனர்.

சுமார் 40 கைதிகள் இவ்வாறு கூரை மீது ஏறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.