எந்த வகையிலும் ரயில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.
நிர்வாகத்தின் அறிவிப்பின் பேரில் ஒரு தொகுதி ஊழியர்கள், காலையில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள சென்றதன் காரணமாக, ரயில் சேவையில் சற்று தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.