முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வாரத்தின் முதல் நாள் யாழில் சுடரேற்றி அஞ்சலி

232 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று யாழ்ப்பாணத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது..

யாழ்ப்பாணம் – கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.