மூன்று மாத குழந்தை உட்பட 26 பேர் பலி

254 0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 26  மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய கொரோனா வைரஸ் மரண எண்ணிக்கை இதுவாகும்.

மேலும், 3 மாத குழந்தையொன்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.