பிலியந்தலை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தல்

228 0

கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் பிரிவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் வலான வடக்கு, வேகட மேற்கு, கிரிபேரிய மற்றும் பாலமுனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் உவர் மலை மற்றும் அன்புவழிபுரம் கிராமசேகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனையின் நீலதண்டஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டார்.