விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு 10 ஆண்டு சிறை

263 0

  விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகளுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 5.4.2010 அன்று மொட்டணம்பட்டியில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரே‌‌ஷ்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, செந்தில்குமாரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து வேடசந்தூர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே செந்தில்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, அவரை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.