ஓட்டோமான் பேரரசின் படுகொலையை இனப்படுகொலை என அறிவித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு. முதல் உலகப் போர் சமயத்தில் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக நாட்டில் பல புரட்சி இயக்கங்கள் உருவாகின. இதன் பின்னணியில் ஆர்மீனியார்கள் இருப்பதை கண்டு கொண்ட ஓட்டோமான் பேரரசு 1915-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி ஆர்மீனியார்களை படுகொலை செய்யத் தொடங்கியது. 1915 – 1916-ம் ஆண்டுகளில் 15 லட்சம் ஆர்மீனியார்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.