மின்னல் தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயம்

226 0

மட்டக்களப்பு மாவடிவேம்பு, கிருமிச்சை பிரதேசங்களில் இடிமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது

கடந்த சில தினங்களாக கடும் வெய்யில் ஏற்பட்டுள்ள நிலையில் திடீர் காலநிலை மாற்றத்தினால் நேற்று வியாழக்கிழமை மாலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடி மின்னலுடனான கடும் மழைபெய்தது.

இந்த நிலையில்; ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த 4 ஆண்கள் மீது இடி மின்னல் தாக்கத்தினால்; படுகாயமடைந்தனர். அதேவேளை வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் வீட்டில் யன்னல் அருகே இருந்த பெண் ஒருவர் இந்த இடிமின்னல் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் 5 பேரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 4 ஆண்கள் சிகிச்சை பெற்று இன்று மாலை வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன் பெண் ஒருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த இடிமின்னல் தாக்குதவில் முல்லைத்தீவில் 3 பேர் மட்டக்களப்பு வெல்லாவெளியில் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் கயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.