கல்கிஸை வெடிகந்த கடற்கரையில் நேற்று இரவு பாரிய டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
20 அடி நீளமான இந்த மீனின் தலை மற்றும் செட்டைகள் சிதைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மீன் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்து, பின்னர் கரையொதுங்கியிருக்கலாம் என அப்பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்