கொரோனா தொற்றினால் சாவகச்சேரியை சேர்ந்த பெண் உயிரிழப்பு!

186 0

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

முள்ளேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முள்ளேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.