புத்தாண்டு தினத்தில் இரு மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. பொல்பித்திகம மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேசங்களில் இந்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.
இந்த கொலை சம்பவங்கள் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொல்பித்திகம – தலாதபிட்டி பிரதேசத்தில் 51 வயதுடைய நபரொருவர் கருங்கல்லால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பில் சந்தேகநபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர பிறிதொரு கொலை சம்பவம் ஹபராதுவ பொலிஸ் பிரிவில் – ஹபராதுவ ரிலாதுகந்த – கொக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இப் பிரதேசத்தில் 30 வயதுடைய நபரொருவர் வாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விரு கொலை சம்பவங்களும் ஒருவருக்கொருவர் மத்தியில் ஏற்பட்ட முரண்பாடுகளால் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பிலும் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர் என்றார்.