வவுனியாவில் நேற்று தாக்குதல்கள் மற்றும் விபத்து சம்பவங்களால் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதி

287 0

வவுனியாவில் புத்தாண்டு தினமான நேற்று தாக்குதல்கள் மற்றும் விபத்து சம்பவங்களால் 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செட்டிகுளம், ஓமந்தை, சிவபுரம் மற்றும் அவிசதப்பிட்டி ஆகிய பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அவற்றில் மதுபோதையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்