நாட்டில் வடக்கு உட்பட ஆறு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய மாகாணம், சப்ரகமுவ, மேல் மாகாணம், வடமேல் மாகாணம், வடமாகாணம் காலி, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடுமையான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் கடுமையான இடிமுழக்கம் மற்றும் மின்னல் தாக்கம் இருக்குமெனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.