சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது

244 0

சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 4 முச்சக்கர வண்டிகள் சோதனையிடப்பட்டன.

அந்த முச்சக்கர வண்டிகளில் பயணித்த 20 பேரும் சட்ட விரோதமான முறையில்  கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல ஆயத்தமாக இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் 14 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 2 பிள்ளைகளும் அடங்குவர்.

இவர்கள் மன்னார், வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்