சிறிலங்காவில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

221 0

சிறிலங்காவில்  கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 405 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 588 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.