மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை நடத்த அனுமதி

273 0

ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனியார் வகுப்புகளை நடத்துவதற்கான சுகாதார நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வௌியிடப்பட்டதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு 2 வாரத்தின் பின் வகுப்புகளை ஆரம்பிக்க முடியும் எனவும் ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 100 மாணவர்கள் மாத்திரமே இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.