பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

222 0

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன்படி, புதுவருடத்தின் பின்னர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார ஆலோசனைக்கு  அமைய கோவையொன்றை பல்கலைகழகங்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் தற்போது பரீட்சைகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.