விசேட தெரிவுக்குழுவுக்கான பிரேரணை

343 0

தேர்தல் மற்றும் வாக்களிப்பு சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு விசேட தெரிவுக்குழு நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்தப் பிரேரணையை 5 ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளையின் போது அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.