சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிப்பு

458 0

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அதாவது இன்றைய தினம் காலாவதியா கவிருந்த சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை 06 மாதங்களாக நீடிக்கப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 01ஆம் திகதி முதல் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை அதாவது சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை 06 மாதங்களால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாகச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து இரா ஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.