திருமறைக் கலாமன்ற இயக்குநர் மரிய சேவியர் அடிகளார் காலமானார்

579 0

திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளார் இன்று(1) காலமானார்.

இவர் யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலா மன்றம் என்ற ஒரு கலை அமைப்பை 1965 ஆம் ஆண்டளவில் ஆரபித்தார்.

1965 ஆம் ஆண்டு உரும்பிராயில் மரிய சேவியர் அடிகள் பணி செய்த காலத்தில் ‘திருமறைக்கலாமன்றம்’ எனும் பெயருடன் இவ் அரங்க இயக்கம் செயற்படத் தொடங்கியது.

உரும்பிராய், சுன்னாகம், மல்லாகம் என ஒன்றிணைந்த கலைஞர்களைக் கொண்டு மரியசேவியர் அடிகள் திருப்பாடல்களின் நாடகங்களை மட்டுமன்றி பல்வேறு விவலிய நாடகங்கள், இலங்கை வானொலிக்கான நாடகங்கள், கூத்துக்கள் எனப் பலவற்றையும் தயாரித்தார்.