கிருலப்பனை ஹைலெவல் வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பற்றியுள்ளது.
மேற்படி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, செல்லும் வழியில் இவ்வாறு தீப் பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த முச்சக்கரவண்டியில் இருவர் பயணித்துள்ளதாகவும், தீ ஏற்பட்டதையடுத்து அவர்கள் வெளியேறி உயிர்த்தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்