ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

366 0

தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய தேசிய, மாகாணப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற தகவல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், சித்திரப் பாடங்களில் காணப்படும் வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

இந்தப் போட்டி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

www.applications.donets.lk/exam என்ற வலைதளத்தை பார்வையிட்டு விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.