வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பியவர் கைது

382 0

இலங்கையில் வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹண தெரிவித்தார்.

மாவனெல்ல, முருத்தவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஜமாத் -இ -இஸ்லாமி (Jamaat-e-Islami) அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் (Rasheed Hajjul Akbar) என்பவரே இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு, தெமட்டகொடை ; பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
<p>கைது செய்யப்பட்ட நபர் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர் என்பதுடன் ஜமாத் – இ- இஸ்லாமி அமைப்பின் வெளியீடுகளில் வஹாபிசம் மற்றும் ஜிகாத் கொள்கைகளை ஊக்குவிக்கும் கட்டுரைகளை எழுதி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.