மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து தொடர்பில் தீர்மானம்

358 0

நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவை தொடர்பாக எட்டப்பட்ட தீர்மானம்…

கொவிட் 19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்

கொவிட் 19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பேரூந்து உரிமையாளர்களிடமிருந்து அறிவிடப்படும் புதுப்பித்தல் கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், நேரசூசி கட்டணம், உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை விடுவிப்பதற்காக 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேரூந்து சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், குறித்த மானியங்களுடன் கீழ்க்காணும் மானியங்களையும் 2021 மார்ச் மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்காகவும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• வருடாந்த விலைமனுக் கோரல் கட்டணத்தின் 10% வீதம் அல்லது 15,000/= ரூபாய்கள் போன்ற பெறுமதிகளில் அதிக பெறுமதி கொண்ட தொகையை அறவிடல்

• அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணத்தின் 10% வீதத்தை அறவிடல்

• நேரசூசி மற்றும் உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணத்தை விடுவித்தல்