வவுனியாவில் மூவரை மடக்கிப்பிடித்த விசேட அதிரடிப்படை! போதைப் பொருட்கள் மீட்பு

263 0

வவுனியா மகாரம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாசிமாதம் 05 திகதி வவுனியா ஹெப்பட்டிகொலாவ விஷேட படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஈரட்டை பகுதியில் சோதனையிடப்பட்டது.

இதன்போது, வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பட்டா வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 18 கிலோ 270 கிராம் கஞ்சா பொதியினையும், அதனை கடத்தி சென்ற மூவரையும் ஹெப்பத்திகொலாவ விஷேட அதிரடிபடையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மகாரம்பைகுளம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த (வயது – 65) கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரின் வீட்டில் மேலதிகமான கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் வழங்கிய தகவலினை அடுத்து நேற்று ஸ்ரீராமபுரத்தில் அமைந்துள்ள அந்நபரின் வீட்டில் ஈரட்டை பொலிஸாரல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 6 கிலோ 540 கிராம் கஞ்சா பொதியினை ஈரட்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.