மட்டக்களப்பு-சூடுபத்தினசேனையில் இன்றைய தினமும் கொவிட்-19 சரீரங்கள் அடக்கம்

398 0

மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சரீரங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

சூடுபத்தினசேனை பகுதியில் 9 கொவிட்-19 சரீரங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த பகுதியில் 9 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்