சிறிலங்காவில் மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று!!

253 0

சிறிலங்காவில் மேலும் 182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, சிறிலங்காவில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 84 ஆயிரத்து 612 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 485 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 321 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில், இன்னும் இரண்டாயிரத்து 982 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, சிறிலங்காவில்  இதுவரை 489 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.