கட்டார் வாகன விபத்தில் மட்டக்களப்பு இளைஞன் பலி

219 0

கட்டார் நாட்டில் நேற்று (27) சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த 25 வயதுடைய ஸியாவுல் ஹக் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கட்டார் நாட்டிற்கு சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் தொழிலுக்காக சென்ற தனது மகன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக ஸியாவுல் ஹக்கின் தந்தை எம்.ஐ.அலியார் என்பவர் தெரிவித்தார்.

தனது மகன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது பஸ் வண்டியில் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டாரில் இருந்து தமக்கு தகவல் கிடைத்ததாக குறித்த இளைஞனின் தந்தை எம்.ஐ.அலியார் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த இளைஞரின் அடக்கம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எம்.ஐ.அலியார் தெரிவித்தார்.