இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு… தீவிர விசாரணையில் பொலிஸார்

220 0

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இன்று (25) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் சடலமாக கிடப்பதை அவதானித்த அவரது மனைவி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.