இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை எனின், அவர்களுக்காக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒரு நாள் விசேட சேவையை நாளை(26) முன்னெடுக்க ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட காரியாலயங்களில்; நாளை(26) காலை 8.30 தொடக்கம் பி.ப 1.00 மணி வரை இந்த சேவையைப் பெறமுடியும் என, ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பி.வீ.குணதிலக்க தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் இந்த சேவை முன்னெடுக்கப்படுவதால், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து வருமாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

