யாழ்.இந்துக்கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் இன்று இடம்பெறாது

402 0

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரது மகன் கல்வி பயிலும் யாழ்.இந்துக் கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் இன்று இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுக்கு உள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ள நவாலியைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தரின் மகன் யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார்.

தரம் பத்தில் கல்வி பயிலும் குறித்த தாதிய உத்தியோகத்தரின் மகன் கல்வி
கற்கும் வகுப்பு மாணவர்கள் நேற்று முற்பகலே வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்
பட்டுள்ளனர்.

முதலாம் தவணைக்காக இன்று விடுமுறை விடப்படும் என்று ஏற்கனவே அறி
விக்கப்பட்டிருந்த போதிலும் இன்று இந்துக்கல்லூரியின் கற்றல் செயற்பாடுகள் நடைபெறாது என்று மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.