க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

269 0

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல்  இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.