யாழ் உடுப்பிட்டியில் பதிவானது கொரோனா!

204 0

கொழும்பு தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி இமயாணனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்றுள்ளமை நேற்றிரவு கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பிசிஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன், உடுப்பிட்டி இமயாணனின் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அவரது பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று கிடைத்துள்ளது. அதில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை வடமாகாணத்துக்கு வெளியே தங்கியுள்ளவர்கள் பிசிஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு இங்கு வருவதை தவிர்க்கவேண்டும்.

அவசர தேவையால் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தால் தங்கியிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவலை வழங்கி சுயதனிமைப்படுத்தல் விதிகளை மதித்து வெளியில் நடமாடுவதை தவிர்க்கவேண்டும் என்றார்.